Sunday, 23 August 2015

தினமும் விஷம்         

      இன்னக்கி  நாம வாழ்ற இந்த அறிவியல் யுகத்துல, ஒரு பக்கம் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் கொட்டிகிடக்கு. அதற்கு நேரெதிறாய், எங்க எதில எப்ப பார்த்தாலும் கலப்படம். கலப்படம் இல்லாத பொருளை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு நிலை தலைகீழாய் மாறிடுச்சு. நம் கிச்சனில் இருக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே.              நாம காலையில பல் தேய்க்க பயன்படுத்துற பல்பொடி முதல் இரவு தூங்க போறதுக்கு முன்னாடி குடிக்கிற பால் வரை, ஏன் நாம் தூங்குகின்ற பாய் வரை அனைத்துமே கலப்படமாய்த்தான் காணப்படுகிறது. பல வேளைகளில் நாம் உண்பது என்னவென்று அறியாமலே  ருசியாக இருக்கிறதென்று நாமும் சாப்பிடுகிறோம்.

   அன்றைக்கு ஏழைகள் மட்டுமே புசித்த உணவு, இன்னைக்கு பணக்காரர்களின் உணவாய் மாறிப்போனதன் காரணம் என்னவோ? அதில் எனக்கொரு சந்தோசம், காரணம் எனக்கு மிகவும் அதிகமாக பிடித்த உணவு அது என்பதனால். அது என்னன்னு யோசிக்கிறின்களா???? வேற ஒண்ணுமில்லை நம்ம கிராமத்து மக்களின் உணவான கேழ்வரகுதான் . 

          நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த  நாட்களில், எங்க வீட்ல  அரிசி சோறுதான். ஆனா எங்க மாமா வீட்ல எப்பவுமே கேழ்வரகு கூழ்  இருந்து கொண்டே இருக்கும். எங்க பாட்டி என்னை அழைத்து , முதுகு தேய்த்து விட சொல்லுவாங்க, நான் போக மறுப்பேன். அப்புறம் இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டோம். அதாவது நான் உங்களுக்கு முதுகு தேய்த்து விடுறேன், நீங்க எனக்கு கேழ்வரகுகூழ் தரணும்னு. கூழ் இருந்தா ஒரு நாளைக்கி ஐந்து வேளை கூட  சாப்பிட்ட நாட்களெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன . இன்னைக்கும் நான் லீவுக்கு போனால் அம்மாட்ட கேட்கிற ஒரே உணவு கேழ்வரகுகூழ். 

   
  இன்னக்கி எங்க பார்த்தாலும் அதிவிரைவு உணவகம் அதிகமாக இருக்குங்க. கண்ணிமைக்கிற நொடில உணவு தயாரிக்கப்படுது. நீங்க அதிவிரைவு உணவகதுல வாங்குற உணவ கொஞ்சம் தாமதப்படுத்தி சாப்பிட்டு பாருங்களேன்.... அதுக்கப்புறம் பட்டினியா கிடந்தாலும் பாஸ்ட் புட்  சாப்பிடனும்னு ஆசையே வராது. ஒரு பதினைந்து  வருசத்துக்கு முன்னாடி  15, 17 வயதில் பெண்கள் பூப்பெய்திய   காலம் மாறி, இப்ப 5-வது படிக்கிற குழந்தைகள் பூப்பெய்தும் நிலை நீங்களும் நானும் அறியாததல்ல. காரணம் நம்ம எல்லாருக்குமே தெரியும். இருந்தாலும் நாம கண்டுகிறதில்லை. சிக்கன் பிரியாணி, சிக்கன்65, என்று நம்முடைய வீட்டு பெண்கள் வெளுத்துகட்டுவதால்.

                 இன்று ஆண்களை விட அதிகமாவே, இந்த சிக்கன் பிரியாணியை பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள், அது மிகவும் ஆபத்தானது என்று அறிந்திருந்தும். பிராய்லர் கோழி 35 நாளில் விரைவாக வளர்ச்சியடையுது. பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லதாம்


         இதை அதிகமாக சாப்பிடுகிறதினால் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு ஏற்படுதுங்க. அதோடு இன்றைய உணவு முறைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே நூற்றுக்கணக்கான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை புது புது பெயர்களில் நோய்களை ஏற்படுத்துகின்றன. பாருங்க நம்ம உடலை நாமதான் பார்த்துக்கனும். நோய் வர்றதுக்கு ஒரு மிகப்பெரிய காரணம் நம்முடைய உணவுமுறை , ஏன்னா கூட்டி கழிச்சு பார்த்தா நாம உழைக்கிறதே இந்த ஒருசாண் வயித்துகாகதான் (நான் சொல்லல, இது நம்ம பெரியவங்க சொன்னது) மறந்துடாதீங்க, நல்லதை மட்டுமே சாப்பிடுங்க,அதை வீட்டுல செஞ்சு சாபிடுங்க. ஏதோ என்னால முடிஞ்சது. 


ரொம்ப நன்றிங்க.   

No comments:

Post a Comment