நாம் பிறந்த போது, வாழ்க்கையின் விளிம்பில் இருந்தாலும், வானத்தை தொடும் அளவிற்கு வளரலாம் என்ற மாபெரும் உண்மைக்கு உருவம் கொடுத்து, இளம் உள்ளங்களை உசுப்பி சென்றிருப்பவர் திரு.கலாம் ஐயா அவர்கள். இன்றைய இளைஞர்களின் கனவு நாயகன் , வாழ்கையைப் பற்றிய புரிதல்களோடு சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொரு வேட்கை கொண்ட மனிதருக்கும், தன் வார்த்தைகளால், வாழ்வால் பாதை அமைத்து கொடுத்திருக்கிறார். அவரின் இறுதி ஊர்வலத்தில் எல்லோருடைய உள்ளங்களும் ஒரே உணர்வோடு, "மீண்டும் நீங்கள் திரும்பி வர மாட்டீரா?" என்ற குமுறலோடு இருந்தன.
எளிமை, உழைப்பு , இயற்கையின் மீது அளவற்ற அன்பு, விருந்தோம்பல், ஒடுக்கப்பட்டோருக்கு புதுவாழ்வு, கனவுகளை மட்டுமே சுமந்து வாழ்ந்தவர்களுக்கு கல்வி என்று அடுக்கி கொண்டே போகலாம் அவர் வாழ்ந்த மதிப்பீடுகளை. கடந்த வருடம் ஐயா அவர்கள்,
நான் பயின்ற சென்னை லயோலா கல்லூரிக்கு வந்திருந்தபோது, தூரத்தில் அமர்ந்து, அவரின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்கின்றேன்.
நாம் அனைவரும் இந்தியத் தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்பதனை எண்பித்தவர் கலாம் அவர்கள். தன் வாழ்விலே ஒரு கட்டத்துக்குப் பின் எல்லாம் இருந்தும், எதையும் தன் சொந்த தேவைக்காக பயன்படுத்தாதவர். இத்தகைய மாமனிதர் வாழ்ந்த தேசத்திலே நான் பிறந்தேன் என்பதை விட, அவர் வாழ்ந்த நாட்களிலே வாழ்கிறேன் என்பதில் என் மனம் பெருமை கொள்கிறது.
இஸ்லாம் மதத்திலே ஒரு முறை உண்டு. ஒரு ஆண்மகனுக்கு எவ்வளவு பொருளாதாரம் (சொத்து) உள்ளதோ , அதற்கேற்ப திருமணங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் கலாம் அவர்கள் ஒரு துறவியாக வாழ்ந்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்த மாபெரும் உண்மை. கலாம் ஐயா அவர்களின் கனவுகள் மெய்யானதாய் ஆகிட உறுதி ஏற்ப்போம்.
கலாம் தாத்தா உங்களுக்கு என் சலாம்

No comments:
Post a Comment